மட்டக்களப்பு மாவட்டத்தில் வன்னாத்தி பூச்சி சின்னத்தில் போட்டியிட்ட முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்ட முன்னால் அமைச்சர் அமீர் அலி, மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேலை தனித்து போட்டியிட்ட மு.கா 01 ஆசனத்தையும், த.தே.கூ 02 ஆசனங்களையும், பிள்ளையானின் கட்சி 01 ஆசனத்தையும், பொது ஜன பெரமுன 01 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மு.க பெற்றுக் கொண்டுள்ள ஒரு ஆசனம் பெரும்பாலும் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீருக்கானது என கூறப்படும் நிலையில் முன்னால் பா.உ அலி சாஹிர் மவ்லானாவும் தனது ஆசனத்தை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
