ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் பாரிய வெற்றியின் மூலம் கிடைக்கப் பெற்ற 17 தேசிய பட்டியல் உறுப்பினர்களுக்கும் உரிய பெயர் பட்டியலை அக்கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது. குறித்த தேசிய பட்டியலில் 3 முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
மொஹமட் முஸ்ஸம்மில்
மர்ஜான் பளீல்
ஆகியோரே மேற்படி தேசிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளவர்களாவர். பொதுத் தேர்தலில் பொது ஜன பெரமுனவில் போட்டியிட்டு மஸ்தான் வெற்றி பெற்றுள்ள காரணத்தினால் ஆளும் தரப்பின் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
