
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சிறுபான்மையினர் தரப்பில் இரு நிபுணர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பாக நேற்று
(02) இடம்பெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதன்போது, குறித்த குழுவில் தமிழ் – முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும்
அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில்,
அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கலாநிதி ஏ.சர்வேஸ்வரன்
மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் ஆகியோர் அடங்கிய 9 பேர் அடங்கிய நிபுணர் குழு
அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் இலங்கையில் வாழுகின்ற பல்லின சமூகங்களினதும் அபிலாசைகளையும்
காலாசார பண்பாடுகளையும் கருத்திலெடுத்து நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு
உகந்த அரசியலமைப்பை உருவாக்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.