Our Feeds


Wednesday, December 9, 2020

www.shortnews.lk

நேற்று கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் மற்றும் நோயாளிகள் பற்றிய முழு விபரம்

 



கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 798 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29,377 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 526 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 53 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் வௌிநாட்டில் இருந்து வந்த ஒருவரும் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டிருந்தார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,818 ஆக அதிகரித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலங்களில் 454 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,258 ஆக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் 7,978 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகினறனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »