அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு அடுத்ததாக சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்கள் கொரோனா தொற்றுக்கு அதிகம் முகம்கொடுக்கும் பிரதேசங்களாக மாற அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்து சென்று தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சாய்ந்தமருது, மற்றும் கல்முனை பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட (Lock Down) பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் சாத்தியம் அதிகமுள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். அஜ்வத் தெரிவித்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வுக் கூட்டம் இன்று (12) சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். அஜ்வத் தலைமையில் இடம்பெற்றது
இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கு மக்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்
இதேவேளை, சுகாதார நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறானவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸ் மற்றும் முப்படையினர், சுகாதார துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.
இந்த நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே. எம். நிஸ்தார், சாய்ந்தமருது பிரதேச கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
