Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

நாடு 14 நாட்களுக்கு முடக்கப்படுமா? இராணுவத் தளபதி விளக்கம்

 



நாட்டை 14 நாட்கள் முடக்கவுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதுவரையில் அவ்வாறான எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு நாட்டை முடக்கப்போவதாக சமூக ஊடகங்களில் சில செய்திகள் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »