துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக திறைசேரிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரியத் பந்துவிக்ரம, சாலிய விக்ரமசூரிய, குஷான் கொடித்துவக்கு, ஜெரார்ட் ஒண்டச்சி, ரொஹான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
