இலங்கையில் இதுவரை 1000 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுவர் நோய் சார்ந்த விசேட வைத்திய நிபுணராகிய டாக்டர் தீபால் பெரேரா இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
இவ்வாறு தொற்றுக்கு இலக்காகிய சிறுவர்களில் ஐவர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக 12 வயதுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு கண்டிப்பாக தொற்று தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் என்பதனையும் வஅர் வலியுறுத்தியுள்ளார்.
