Our Feeds


Saturday, June 26, 2021

www.shortnews.lk

கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, தலையில் 2 துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்துள்ள நிலையில் களனி கங்கையில் மிதந்த சடலம்.

 



நவகமுவ ரனால பிரதேசத்தில் களனி கங்கையில் மிதந்துக் கொண்டிருந்த கை கால்கள் கட்டப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இன்று மதியம் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரினது என தெரிவிக்கப்படுகிறது.

அவரின் கைகள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளதாகவும் தலையில் இரண்டு துப்பாக்கிக் தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டில் கடத்திச் செல்லப்பட்ட நபரின் கைகள் சங்கிலியால் கட்டப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹங்வெல்ல பிரதேசத்தில் அவர் தங்கி இருந்த தற்காலிய விடுதியில் வைத்து இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »