Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

குழந்தைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் என்றால் உடனே வைத்தியரை நாடுங்கள் - காரணத்துடன் வைத்தியர் விளக்கம்.

 



குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்குமானால், உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுமாறு கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.


டெங்கு மற்றும் கொவிட் ஆகிய நோய்களுக்கான பொதுவான அறிகுறி காய்ச்சல் எனவும் அவர் கூறியுள்ளார்.

வைரஸ் காரணமாகவே, காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தினால், வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று, தற்போதைய சூழலில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாக விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »