இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளை பிரித்தானியா கொரோனா சிவப்பு பட்டியலில் (RED LIST) உள்ளடக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான், எகிப்து, பஹரேன், கொஸ்டாரிக்கா, சூடான் உள்ளிட்ட 7 நாடுகள் இந்த சிவப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து தமது நாட்டிற்கு வரும் பயணிகள், ஹோட்டலில் சுயதனிமைப்படுத்தல் 10 நாட்கள் இருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு எதிர்வரும் 8ம் திகதி வரை அமலில் இருக்கும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

