கம்பளை நகரில் 9 யாசகர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பளை நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திலேயே அதிகளவான யாசகர்கள் தங்கியுள்ள நிலையில், இவர்களுள் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பஸ் தரிப்பிடத்தில் தங்கியிருந்த 13 யாசகர்களுக்கு செய்யப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் போது, 8 யாசகர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
