எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலின் ஒரு பகுதி கடலின் அடியில் மோதியுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதுவரை கப்பலில் எரிபொருள் கசிவு ஏதும் ஏற்படாத நிலையில், அது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.




