Our Feeds


Saturday, June 26, 2021

www.shortnews.lk

BREAKING: பயங்கரவாத தடைச்சட்ட - PTA மீளாய்வுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கவுள்ள ஜனாதிபதி

 




(ஆர்.ராம்)


நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை உபகுழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வார இறுதிக்குள் நியமிக்கவுள்ளார்.


முன்னதாக, பயங்கரவாத தடைச்சட்டத்தில் மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, வெளிவிவகாரர்களுக்கான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் கூட்டாக இந்த அமைச்சரவைப் பத்திரத்தினை சமர்ப்பித்திருந்தனர்.

இதேவேளை, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  46ஆவது கூட்டத்தொடரின் இலங்கை பற்றிய தீர்மானத்திலும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (VK)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »