இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த கடுகஸ்தொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாகரதெனிய வத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில், இன்றுக்காலை 6 மணியுடன் முடக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில், களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவஸ்கடுவ தெற்கு முடக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில், பெரியக்கல்லாறு- 2, பெரியக்கல்லாறு-3 மற்றும் பெரியக்கல்லாறு -3 தெற்கு ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரமத்த தெற்கும் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.