Our Feeds


Thursday, July 1, 2021

www.shortnews.lk

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வந்த தனியார் பஸ்ஸில் பயணித்த அனைவரும் கைது - கிரான்பாஸில் பஸ் மடக்கிப் பிடிப்பு

 



தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இதன்போது, பேருந்தில் பயணித்த 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கிரேண்ட்பாஸ் பகுதியில் வைத்து குறித்த பஸ் இவ்வாறு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »