இன்று (01) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,864 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 365 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 221 பேரும் கண்டி மாவட்டத்தில் 81 நபர்களும் யாழ். மாவட்டத்தில் 23 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 33 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 45 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 97 பேரும் பதுளை மாவட்டத்தில் 40 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐவரும் திருகோணமலை மாவட்டத்தில் 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் 07 பேரும் மன்னார் மாவட்டத்தில் 08 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.