கண்டி - பலகொல்ல பகுதியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த சம்பவத்தின் மந்திரவாதி இன்று பலகொல்ல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான சந்தேகநபர் காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் இன்று பல்லேகல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.