பிலிப்பைன்ஸில் 85 பேருடன் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.
பிலிப்பைன்ஸ் தென்மாகாணத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதுவரை படுகாயங்களுக்குள்ளான 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்பட்டது.

