காலி – அம்பலாங்கொடை – வத்துகெதர ஸ்ரீபத்தி மத்திய மகா வித்தியாலயத்தில் கொரோனா தடுப்பூசி பெறச் சென்றவர்கள் இடையே சற்றுப்பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
இன்று காலை குறித்த இடத்தில் தடுப்பூசியளிக்கின்ற பணி முன்னெடுக்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை மறந்து செயற்பட்டதால் இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.

