(எம்.மனோசித்ரா)
போதிய உளவுத் தகவல்கள் பகிரப்பட்டும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்க போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமது பதவிகளையும் உயிர்களையும் பாதுகாத்து தருமாறு அஸ்கிரிய, மல்வத்து மகநாயக்க தேரர்களிடம் உயர் மட்ட பொலிஸ் குழுவொன்று வேண்டுகோளை விடுத்திருந்தது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பேராயரின் சமூக தொடர்பு மையம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான தேசிய கத்தோலிக்க குழுவின் உறுப்பினர் அருட்தந்தை சிறில் பெர்னாண்டோ , பேராயரின் மக்கள் தொடர்பு மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ, களுத்துறை மாவட்ட பிரதான சங்கநாயக பரகடுவே சரணங்கர தேரர் மற்றும் பியகம பௌத்த தேரர் சபையின் பெலிகல அமரசிறி தேரர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களில் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதால் அவர்களை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தவறிழைத்தவர்களாக காண்பிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை இனவாத மற்றும் மதவாத திசையில் தள்ளுவதற்கு முற்படுகின்றமை இந்த கருத்துக்களின் ஊடாக தெளிவாகிறது. எனவே அந்த கருத்துக்களை நாம் கடுமையாக எதிர்க்கிறோம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது,
