Our Feeds


Saturday, September 11, 2021

www.shortnews.lk

கொரோனா தடுப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து மேலும் சில மருத்துவர்கள் வெளியேற்றம்?

 



கொரோனா தொழில்நுட்ப குழுவிலிருந்து மேலும் சில மருத்துவ நிபுணர்கள் வெளியேறவிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவிக்கிறது.


மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப் பெறாமல், அரசியல் ரீதியிலான முடிவுகள் அங்கு எடுக்கப்படுவதாகவும் அதனால் தொழிற்துறை என்பதை பாதுகாத்துக் கொள்வதற்காக குழுவிலிருந்து விலக சிலர் தீர்மானித்திருப்பதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார்.

இதுவரையில் குறித்த குழுவிலிருந்து இரண்டு மருத்துவ விசேட நிபுணர்கள் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »