தேசிய பால்மா மற்றும் திரவப்பால் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தேசிய கால்நடை சபை அறிவித்துள்ளது. “தற்போதைய நிலைமையை கருத்தில்கொண்டு அவ்வாறான செயற்பாட்டுக்கு செல்லவேண்டும்” என்று தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் சுமித் மாகமகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரையிலும்
எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.சகல உற்பத்தி செலவுகள் மற்றும் பொதியிடல் செலவுகள் அதிகரித்துள்ளமையால், இந்தத் தீர்மானத்தை எடுக்கவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.