அபுதாபியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடந்தது. இதற்கு, ஹவுத்தி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் டுரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 எண்ணெய்த் தாங்கிகள் தீப்பற்றி வெடித்து சிதறின. விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது. அதேநேரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.