உலக உணவுத் திட்டத்தின் இலங்கைப் பணிப்பாளர் திரு.அப்துர் ரஹீம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி, உணவு மற்றும் விவசாய முகவரான்மையின் (FAO) பிரதிநிதி திரு.விம்லேந்திர சராண் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (10) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து இதன் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதோடு,
இலங்கை எதிர்நோக்கும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் தாங்கள் சிறப்புக் கவனம் செலுத்துவதாகவும் இதன் போது அவர்கள் தெரிவித்தனர்.