மாஹோ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகொல்லாகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகன், தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
சம்பவத்தில் பலகொல்லாகம-பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேக நபர் இன்று (18) மாஹோ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மாஹோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.