Our Feeds


Saturday, February 12, 2022

SHAHNI RAMEES

தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை ரத்து!

 

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பரிசோதனை செய்து 'தொற்று இல்லை' என 'கொரோனா நெகட்டிவ்' சான்றிதழை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »