Our Feeds


Thursday, February 17, 2022

ShortNews

மூடப்பட்டுள்ள சியாரங்களை திறப்பது தொடர்பில் வக்பு சபைக்கென இருக்கும் சட்டத்தை கொண்டு நாங்களே பேசித் தீர்த்துக் கொள்கிறோம் - ஞானசார தேரரிடம் வக்பு சபை தலைவர்



ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கும் வக்பு சபைக்கும் இடையில் நடந்த சனிக்கிழமை இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடலில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீன் பங்கு கொண்­டி­ருந்தார். இதன் போது நீதி அமைச்சர் அலி சப்ரியும் குறித்த கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்தார் அப்போது வக்பு சபைத் தலை­வ­ரிடம் ஞான­சார தேர­ரினால் சில விளக்­கங்கள் கோரப்­பட்­டன.


நாட்டில் பல பகு­தி­களில் வர­லாற்று புகழ்­வாய்ந்த ஸியா­ரங்கள் மூடப்­பட்­டுள்­ள­தாக சூபி முஸ்­லிம்கள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணி­யிடம் புகார் செய்­துள்­ளார்கள். இந்த ஸியா­ரங்கள் மீண்டும் திறக்­கப்­ப­ட­வேண்டும் என ஞான­சார தேரர் கோரிக்கை விடுத்தார்.


இதற்கு வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் பதி­ல­ளிக்­கையில் வக்பு சபைக்­கென சில சட்ட ஒழுங்கு விதிகள் உள்­ளன. அதன்­மூ­லமே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும். முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் நிலவும் இவ்­வா­றான பிரச்­சி­னை­களை நாங்­களே கலந்து பேசி தீர்த்துக் கொள்­கிறோம். எங்­க­ளுக்குள் நிகழும் இவ்­வா­றான சிறிய பிரச்­சி­னை­களை எவ்­வாறு தீர்த்துக் கொள்­ளலாம் என ஆராய்ந்து வரு­கிறோம் என்றார்.


நன்றி:  விடிவெள்ளி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »