(இராஜதுரை ஹஷான்)
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு எதிராக உள்ளதை கையொப்பத்தின் ஊடான சத்திய பிரமாணத்தை சபாநபாயகரிடம் ஒப்படைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடிக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு பெற்றுக்கொள்ள பாரிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் கிடையாது. சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையாக பேணப்பட வேண்டும்.காலம் தாழ்த்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்தரப்பினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதால் குறித்த பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு 113 பெரும்பான்மையை பெற்றுக் கொள்வார்கள் என்பதை எதிர்தரப்பினர் தெளிவுப்படுத்த வேண்டும்.