நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவி வருவதன் காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தறை மற்றும் காலி மாவட்டஙகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.