Our Feeds


Tuesday, May 31, 2022

ShortNews

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை - பட்டியல் இணைப்பு



நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவி வருவதன் காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தறை மற்றும் காலி மாவட்டஙகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »