Our Feeds


Tuesday, May 31, 2022

ShortTalk

நேற்று நடந்த பஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூடு; காரணம் வெளியானது.



புறக்கோட்டை – பஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (30) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் சம்பளப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதாக அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதான முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அத்துடன், அவருடன் இருந்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர், நேற்று (30) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 07 பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய அவர்களுக்கு 3 மாதங்களுக்கான சம்பளம் வழங்காமல் பணியிலிருந்து நிறுத்திய நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நஷ்டஈடு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »