மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த , ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை அது குரித்த விசாரணைகள் உயர் நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது.
மனுதார் தரப்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணியின் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இவ்வாறு உயர் நீதிமன்றம் இவ்வழக்கை ஒத்திவைத்தது.
இதற்கு முன்னரான பரிசீலனையின் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிட நீதியரசர்கள் குழாம் மனுதாரருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர் மனுவின் ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.