Our Feeds


Tuesday, May 31, 2022

ShortTalk

ஞானசார தேரர் அல்குர்ஆனை அவமதித்த வழக்கு, குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய வழக்கு ஒத்திவைப்பு



(எம்.எப்.எம்.பஸீர்)


பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட  அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தமை  தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 291 அ அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


குறித்த வழக்கு  நேற்று ( 30) கோட்டை நீதிவான்  திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, விசாரணையாளர்களுக்காக நீதிமன்றில் ஆஜரான பொலிஸ் அதிகாரி,  விசாரணைகள் நிறைவு பெற்று சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 291 அ அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டு தாக்கல் செய்ய ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக  நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

அல் குர் ஆன் அவமதிப்பு தொடர்பில் கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில் அதன் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு கோட்டை நீதிவான் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

இந்த நிலையில், ஞானசார தேரருக்கு எதிரான குற்றச்சாட்டை தாக்கல் செய்ய வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »