Our Feeds


Monday, May 30, 2022

ShortTalk

O/L பரீட்சை எழுதச் சென்ற மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பரீட்சை மேற்பார்வையாளர் கைது!




அநுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றின் பாடசாலை மாணவி ஒருவரை பரீட்சை மண்டபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் ஜூன் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த மாணவி க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக கடந்த 25 ஆம் திகதி பரீட்சை எழுதச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி, ஆசிரியை ஒருவரிடம் தனக்கு நிகழ்ந்தவற்றைக் கூறி விட்டு பின்னர் தனது பெற்றோருடன் சென்று கடந்த 26ஆம் திகதி ஹித்தோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »