கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
காணாமல் போனோரின் குடும்பத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,
சிறையில் அடைக்கப்பட்டுள்ள, காஷ்மீர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸை (Khurram Parvez) விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வலிந்து காணாமலாக்கப்படுதலுக்கு எதிரான ஆசிய சம்மேளனத்தின் (AFAD) தலைவரான குர்ரம் பர்வேஸ் 189 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.