Our Feeds


Saturday, June 25, 2022

SHAHNI RAMEES

கொழும்பில் இன்று இரவு முதல் 10 மணிநேர நீர்வெட்டு!

 

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 10 மணியில் இருந்து நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

சுமார் 10 மணிநேரங்கள் வரையில் நீர் விநியோகம் தடைப்படும் என குறித்த சபை அறிவித்துள்ளது.


 
கோட்டை, புறக்கோட்டை, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட, பாகொட, விஜேராம சந்தியில் இருந்து 7ஆம் மைல் தூண் வரை மற்றும் அந்த பகுதியின் ஹைலெவல் வீதியின் அனைத்து குறுக்கு வீதிகள், நுகேகொட சந்தியிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பகுதி மற்றும் கிளை வீதிகளில் நீர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த நீர்வெட்டினை மேற்கொள்வதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »