ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியை மறித்து, சுமார் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த போதும், அவர்களுக்கு இதுவரை மண்ணெண்ணெய் கிடைக்காத காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தை மாற்றுவதற்கு ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.