Our Feeds


Monday, June 27, 2022

SHAHNI RAMEES

வவுனியா வேப்பங்குளத்தில் பதுக்கப்பட்டிருந்த 3,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது!


 வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 லீற்றர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின்போது இன்று (27) கைப்பற்றப்பட்டதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸார் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தை சோதனை செய்தனர். இதன்போது களஞ்சியசாலை பகுதியில் 15 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 லீற்றர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது.

 இதனையடுத்து குறித்த 15 பெரல்களில் காணப்பட்ட 3000 லீற்றர் டீசல்களும் நெளுக்குளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்னள நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »