அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நாட்களிலும் விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிக்கல்கள் உட்படலான பல விடயங்களைக் கருத்தில் கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.