Our Feeds


Sunday, June 12, 2022

ShortTalk

இலங்கை வந்த கேஸ் கப்பலுக்கு 5வது நாளாக இன்றும் பணம் செலுத்தாமையால் விநியோகம் இல்லை!



லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பலொன்று இன்று (12) ஐந்தாவது நாளாகவும் பணம் செலுத்தப்படாததால் எரிவாயு விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு ஏற்றிக் கொண்டு கடந்த 8ஆம் திகதி கொழும்பு கடல் பகுதிக்கு கப்பல் வந்தபோதும் அதனை விடுவிப்பதற்கான டொலர்கள் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக லிட்ரோ நிறுவனம் இன்றும் மக்களுக்கு எரிவாயு விநியோகிக்கவில்லை என தெரிய வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »