லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பலொன்று இன்று (12) ஐந்தாவது நாளாகவும் பணம் செலுத்தப்படாததால் எரிவாயு விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு ஏற்றிக் கொண்டு கடந்த 8ஆம் திகதி கொழும்பு கடல் பகுதிக்கு கப்பல் வந்தபோதும் அதனை விடுவிப்பதற்கான டொலர்கள் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக லிட்ரோ நிறுவனம் இன்றும் மக்களுக்கு எரிவாயு விநியோகிக்கவில்லை என தெரிய வருகிறது.