Our Feeds


Saturday, June 11, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் 70 சத வீதமான குடும்பங்கள் உணவுப்பொருள் நுகர்வைக் குறைத்துள்ளன! யுனிசெப் அமைப்பு தெரிவிப்பு...!

 

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் மந்த போஷணையினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் மொத்த சிறுவர் சனத்தொகையில் அரைப்பங்கினர் ஏதேனுமொரு வகையிலான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி உணவுப்பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் 70 சத வீதமான குடும்பங்கள் உணவுப்பொருள் நுகர்வைக் குறைத்துக்கொண்டிருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.



இந்நிலையில் அடுத்துவரும் 7 மாதங்களில் அதிகரிக்கக்கூடிய சிறுவர்களின் தேவைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, 1.7 மில்லியன் சிறுவர்களுக்கு அவசியமான போசஷனை, சுகாதாரம், தூயகுடிநீர், கல்வி மற்றும் உளநலசேவை உள்ளிட்ட தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குமாறு அவ்வமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டின் மொத்த சிறுவர் சனத்தொகையில் அரைப்பங்கினர் ஏதேனுமொரு வகையிலான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »