காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் பின்பகுதியில் நிலத்தை தோண்டும்போது அதிலிருந்து கைக்குண்டு ஒன்றை இன்று சனிக்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஹோட்டலின் பகுதியின் நிலப்பகுதியில் இன்று (04)காலை நிலத்தை தோண்டி கழிவு நீரை விடுவதற்காக தாங்கி ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் கைகுண்டை மீட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.