நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரால் மாத்தறை, மடிஹா பகுதி ஹோட்டல் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந் அவர்களது கெப் வண்டி இன்று (03) கைப்பற்றபட்டதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது
கைது செய்வதற்காக தேடப்படும் திலீப் வெதயாராச்சியின் மகனும் மருமகளும் குறித்த ஹோட்டலுக்குச் சென்று அங்கு தமது கெப் வண்டியை நிறுத்திவிட்டு ஹோட்டலின் உரிமையாளருக்குச் சொந்தமான வாகனத்தில் மாலபே நோக்கிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்து தகாத வார்த்தைகளை பிரயோகித்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர்.