எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதி நிலைநாட்டப் பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ மற்றும் தொழிலதிபர் திருகுமார் நடேசன் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு கம்பஹா மேல் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர்.
தொம்பே, மல்வான பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்கும் ஆடம்பரமான வீடொன்றை நிர்மாணிப்பதற்கும் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச, நீதி வென்றுள்ளதாக நம்புவதாக தெரிவித்தார்.
அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தம் தனக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, “பொறுத்திருந்து பார்ப்போம்” என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பதிலளித்தார்.
மேலும் ,
"எப்பொழுதும் மிகவும் காய்த்த மரத்தின் மீதுதான் கற்கள் எறியப்படும்.
என அவர் ஒரு பழமொழியை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத் தக்கது