எரிபொருள் நெருக்கடியானது தொழில்நுட்பப் பிரச்சினையே தவிர அது அரசியல் பிரச்சினை அல்லவென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
தமது குடும்பத்தினரும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருப்பதால், மக்கள் படும் இன்னல்களை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.