பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் இரண்டும் நாளை மறுதினமும் (23) மறுநாளும் (25) நாட்டை வந்தடையவுள்ளதால் தற்போது காணப்படும் எரிபொருள் நெருக்கடியை ஓரளவுக்கு முகாமைத்துவம் செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
வியாழக்கிழமை பெற்றோல் கப்பலொன்றும் வெள்ளிக்கிழமை (24) டீசல் கப்பலொன்றும் நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இந்த கப்பல்கள் வருகை தந்ததன் பின்னர் தற்போது காணப்படும் நெருக்கடி நிலைமையை ஓரளவிற்கு சீராக முகாமைத்துவம் செய்ய முடியும். எனினும் 100 சத வீதம் நிலைமை சீராகும் என்று எம்மால் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.