Our Feeds


Wednesday, June 22, 2022

ShortTalk

பெட்றோல் கப்பல் நாட்டுக்கு எப்போது வரும்? - இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்!



பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.


இதற்கமைய நாளை மறுதினம் முதல் பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள கனிய எண்ணெய் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரண்வல, மசகு எண்ணெய் இன்மையால் நாளை மறுதினம் முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீள மூடவேண்டிய நிலை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போதுமான அளவு எரிபொருள் கிடைக்காமையால் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பகலிரவாக பொதுமக்கள் வீதியில் பல கிலோமீற்றர்களுக்கு வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »