Our Feeds


Saturday, June 11, 2022

ShortNews Admin

தீ வைத்து எரிக்கப்பட்ட தனது வீட்டை பார்வையிட்டார் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க!



தீ வைத்து எரிக்கப்பட்ட தனது வீட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க நேற்று (10 ) சென்று பார்வையிட்டார்.


கடந்த மே மாதம் 9ஆம் திகதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரது வீடுகளும், உள்ளூர் அரசியல்வாதிகளின் வீடுகளும் தீயிட்டு சேதப்படுத்தப்பட்டன.

இதன்போதே அநுராதபுரம் விமான நிலைய வீதியிலுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீடும் தீயிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »