(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும்.
எந்தத்தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.
நாட்டு மக்கள் எதிர் கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை முன்வைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்க்ஷ நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.