கொழும்பில் இன்று (2) அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் நடத்தலுள்ள போராட்டத்தை தடை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார்.
அமைதியான போராட்டத்தை தடை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதில்லை. ஆனால் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் நடந்து கொண்டால் பொலிஸார் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியுமென கூறி அந்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.